Posts

Showing posts from March, 2018

சிவபெருமான் கொடுத்த வரமே வாஸ்து - தெரிந்து கொள்ளுங்கள்

Image
 வாஸ்து என்பதற்கு வசிப்பிடம் என்பது பெயர். வாஸ்தி என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே வாஸ்து என்னும் பெயர்.  வளமான மங்களகரமான இடத்துக்குப் பெயர்தான் வாஸ்து. இந்த வாஸ்து ஒரு வீட்டில் நிலைகொள்ள, அவரது வரலாற்றை அறிந்து, படித்து, முறைப்படி வழிபட்டபின் புது வீடு கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக  இருக்க முடியும். ஒருமுறை, அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய  வியர்வையில் இருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி  அந்தகனை விழுங்கி விட்டது. பிறகு சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய  சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கி விட கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார். குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து விடாமல் இருக்க, தேவர்களை அவன் மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான  பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம் பட்டதால், அசுரன் புனிதத் தன்மை அடைந்த...

வாஸ்துப்படி தெற்குதிசை பார்த்த வாசல் நல்லதா...?

Image
 ஒரு மனையின் நான்கு திசைக்கும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள். வடகிழக்குக்கு ஈசான்யம், தென்கிழக்குக்கு அக்னிதேவன், வடமேற்குக்கு வாயுதேவன், தென்மேற்கில் நிருதிதேவன் ஆவார். வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள். வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை. வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் தெற்கு  மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும். பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். தெற்குப் பார்த்த மனையானது பெரும்பாலும...

க‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்!

Image
வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. ஒரு கட்டடத்தின் தலைவாசல் என்றும் நீச்ச‌த்தில் அமைக்ககூடாது. அவ்வாறு நீச்சதில் அமைக்கும் போது நம் வாழ்வில் பல இன்னல்கள் நேரும். ஒரு கட்டடத்தி‌ல் தலைவாசல் அமைக்கக்கூடாத இடங்கள்: மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல.

வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்ன தெரியுமா?

Image
 ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை, (1) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம். (2) ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம். (3) ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.  (4) ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.  (5) உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.  (6) ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.

உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க

Image
வாஸ்து என்பது இன்றைக்கு பெரும்பாலோனோர் பேசக்கூடிய விசயமாகிவிட்டது. வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றாலே வாஸ்து சரியா இருக்கா பாத்தீங்களா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்க கூடாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.  மகாபாரத படங்கள்  சிலரது மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.  தாஜ்மகால்  காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது இறப்பின் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, உருவங்களையோ வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகுமாம். ...

வருமானம் தரும் வடக்கு ஜன்னல்

Image
 ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம். வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது. வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள். குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன என பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான் முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு. குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர் பத்மநிதி. நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோவிலில்...

வண்ண வண்ண வீடுகள் வாஸ்துவா?

Image
  கேள்வி:   தற்பொழுது வீடுகள், அலுவலகங்கள் எல்லாம் கலர் கலராக இருக்கிறது. இவை யாவும் வாஸ்து தொடர்புடையது என்கிறார்கள். எதற்காக இந்த மாதிரி வண்ணமயமாக்குகிறார்கள்?   ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:   வண்ணங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய சக்தியாக இருக்கிறது. சில நிறங்களை நாமே பார்த்திருக்கிறோம். சில நிறங்கள் சிலவற்றின் அடையாளம். கருப்பு என்றால் துக்கம், சிவப்பு என்றால் முன்பு அபாயம், இப்போது எய்ட்ஸ் என்று பொதுவாக குறிக்கப்படுகிறது. சாதாரணமாக ஜாதகத்தில் என்னென்ன கிரகங்கள் அதிபதியாக இருக்கிறதோ அதற்குரிய நிறங்கள் பயன்படுத்தும் போது கோபதாபங்கள் கொஞ்சம் குறையும். காம விருப்பம் இல்லாமல் இருக்கிறார். மிகவும் விரும்பி வருகிறார், ஆனால் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறார் என்று சொல்லக்கூடிய கணவன், மனைவி ஜாதகத்தையெல்லாம் பார்த்துவிட்டு வீட்டின் வண்ணத்தை, குறிப்பாக படுக்கையறை வண்ணத்தை மாற்றுங்கள் என்றும், இந்த வண்ணச் சுவர் இருக்கிற மாதிரி படுக்கையறையை மாற்றிப் பாருங்கள். சில குறிப்பிட்ட பொருட்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறுகிறோம். ...

வாஸ்து : வாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா?

Image
 ஒரு குடும்பம் வாழ்ந்து, வீழ்ந்து போன தங்களுடைய வீட்டை விற்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளை வாங்கலாமா? 4வது வீட்டில் சனியோ அல்லது ராகுவோ இருந்தால் வாங்கலாம். 4வது வீட்டில் ராகு இருந்தாலோ, 4வது வீட்டில் 6க்குரிய கிரகம் இருந்தாலோ, 4வது வீட்டில் 8க்குரிய கிரகம் இருந்தாலோ வாழ்ந்து முடிந்த, இடிந்துபோன வீடுகளையெல்லாம் வாங்கலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இதேபோல, 4வது வீட்டில் சனி இருந்தால் அவர்களும் வாங்கலாம். பாதகாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னத்தில் பாதகாதிபதி சனி பகவான். மேஷ லக்னத்தில் 4ல் சனி இருந்தால், வங்கியில் கடன் வாங்கி, அதனை திருப்பிக் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வரக்கூடிய சொத்துக்களையெல்லாம் வாங்கலாம். இவர்களுக்கெல்லாம் எந்த பாதிப்பும் வராது. பின்னமான சொத்துக்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.  ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Image
 ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.

செல்வ வளம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்...!

Image
 நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும். ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்: அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம் ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்! ஸ்ர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம் ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம்ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது. குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே! இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவறே! தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே! செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலட்சுமியே! எங்களுக்கு சகல செளபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.

வாஸ்து : மனித செயல்பாடுகளை நிர்ணயிக்கும் வட மேற்கு மூலை

Image
 மனிதன் உயிர் வாழ்விற்கு இயற்கையிலிருந்து தரப்படும் அடிப்படை தேவை காற்று. இது பஞ்சபூதங்களில் மூன்றாவது மூலக்கூறாக கருதப்படுகிறது. வாஸ்துவில் வடமேற்கு மூலையே காற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இதனை "வாயு மூலை" என்றும் கூறுவர். ஒரு இடத்தின் வடமேற்கு மூலையை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி கட்டடம் கட்டுவது அவசியமாகும்.   வடமேற்கு உள்மூலையில் வரக்கூடியவை: கழிவறை (உட்காரும் முறை: வடக்கு/தெற்கு நோக்கி அமருவது நல்லது) தொழில் நிறுவனம் என்றால் விற்க வேண்டிய பொருட்களை வைக்கவேண்டும்.   வடமேற்கு வெளிமூலையில் வரக்கூடியவை: கழிவு நீர் தேக்கும் தொட்டி(Septic tank) வடமேற்கு மூலையில் (உள் மற்றும் வெளி மூலைகள்) வரக்கூடாதவை: பணப்பெட்டி வைக்கும் அறை படிக்கும் அறை கிணறு / ஆழ்துளை கிணறு / பள்ளம் / மேடு போர்டிகோ (Portico) மேல்நிலை தண்ணீர் தொட்டி உயரமான மரங்கள் உள்மூலை படிக்கட்டு வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு