Posts

Showing posts from April, 2018

பங்குனி மாதத்தில் கிரஹ பிரவேசம் செய்வதில்லை ஏன் தெரியுமா...?

Image
 புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால்காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பங்குனியில் செய்வதில்லை. வீடு கட்ட நாம் வாஸ்து பகவானை வணங்குவது வழக்கம். அவர் பூமிக்குள் தூங்கிக்கொண்டு இருப்பவர். முழித்திருக்கும் நேரம் மிகவும் குறைவு. 36 நிமிடங்களே முழித்திருப்பார் என்கிறார்கள். அந்த நேரத்தை வாஸ்து நேரம் என்கிறோம். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து பூமி சம்பந்தமான காரியங்களை  தொடங்குவது வழக்கம். பங்குனி மாதத்தில் வாஸ்து பகவான் முழிப்பதே இல்லை. பூமிக்கடியில் உறங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வாஸ்து பூஜை செய்ய இயலாது. மீறி வீடு கட்ட தொடங்கினால் வாஸ்து பகவானின் கோபத்திற்கு உள்ளாக நேரும். செய்யும் செயலில் தடங்கல்கள் ஏற்படும். வீடு சார்ந்த நிகழ்வுகளை இந்த மாதத்தில்  நடத்துவதில்லை. இதே விதி ஆனி, புரட்டாசி, மார்கழி  ஆகிய மாதங்களுக்கும் பொருந்தும்.

வாஸ்து: கிணறு அமைக்கும் முறை

Image
 வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் தான் வரவேண்டும். ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது. ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமை‌க்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்குள் கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ கண்டிப்பாக அமைக்ககூடாது. மேலும் ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.

வாஸ்து படி வீட்டிற்குள் தரைத்தளம் (Flooring) அமைக்க கவனிக்க வேண்டியவை

Image
 வீட்டை வாஸ்து படி அழகாக வடிவமைத்து கட்டினாலும் வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளமும் வாஸ்து சாஸ்திரப்படி சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். தட்பவெப்பநிலைகளில் மாறாமல், வெடிப்புகள் தோன்றாமல் இருக்க வேண்டும். நடக்கும் போது ஒலி தோன்றாதவாறு இருக்க வேண்டும். கழுவ, துடைக்க எளிதாக இருக்க வேண்டும்.  * புறப்பகுதித் தரையை விட வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளம் கண்டிப்பாக உயரமாக இருக்க வேண்டும். * வீட்டின் தரைத்தளம் முழுவதும் சமமாக இருக்க வேண்டும். * வீட்டிற்குள் அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் வீட்டின் தரைத்தளத்தை விட உயரமாக இருக்க கூடாது. * வீட்டின் மேல்தளத்தில் (மாடியில்) அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் அந்த வீட்டின் தென்மேற்கு தரைதளத்தை விட உயர்ந்து இருக்காமல் இருக்கும் படி அமைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை!

Image
 சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை  பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை. மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள். * விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள்  விரைவில் தீர வழிபிறக்கும். * லக்ஷ்மி கடாக்ஷம் * எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் * நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும் * தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும் * மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. * பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்...