Posts

Showing posts from July, 2018

வாஸ்துப்படி தெற்குதிசை பார்த்த வாசல் நல்லதா...?

Image
ஒரு மனையின் நான்கு திசைக்கும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள். வடகிழக்குக்கு ஈசான்யம், தென்கிழக்குக்கு அக்னிதேவன், வடமேற்குக்கு வாயுதேவன், தென்மேற்கில் நிருதிதேவன் ஆவார். வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.  வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.  வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் தெற்கு  மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.  பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.   தெ...

வாஸ்து படி படுக்கை அறையை அமைப்பது எப்படி?

Image
வாஸ்து படி வீட்டில் படுக்கையறையை எப்படி அமைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.   ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும்.     வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.     * ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.    * குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.     * படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.    * மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.     * படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தல...

வாஸ்து: கட்டிடத்திற்கு எந்த வகையான வர்ணம் பூசலாம்?

Image
ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு குறிப்பிட்ட வர்ணம் (Colour) பூசுவதால் வசிக்கும் நமக்கும் பார்க்கும் நபர்களுக்கும் ஒரு வித சாந்தமான நல்ல மனநிலையை கொடுக்கிறது. ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதி மற்றும் உள் அறையின் சுவற்றில் கீழ்க்கண்ட வர்ணங்களை பூசலாம். * ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுவற்றிற்கு White or Light Yellow Colour பூச வேண்டும். * ஒரு கட்டிடத்தில் உள்ள Hall - ன் உள் சுவற்றிற்கு Off White Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு Light Blue Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள சமையலறையின் உள் சுவற்றிற்கு Light Orange Colour பூச வேண்டும். * ஒரு வீட்டில் உள்ள படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு Light Green Colour பூச வேண்டும்.

தியானம் செய்ய சிறந்த இடம் எது?

Image
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள்  மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். மேலும், தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே  நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.  மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே  செல்கின்றன.   இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை. இவ்வாறு தியானம் செய்வதற்க்கு அமைதியான  சூழல், சுத்தமான காற்று என்பன முக்கியம். அதேபோல் தியானம் செய்ய வாஸ்து படி சிறந்த இடம் ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை ஆகும். அந்த வடகிழக்கு அறையின் வடக்கு மற்றும் கிழக்கு  பகுதியில் ஜன்னல் இருப்பது மிகவும் நல்லது.

மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்!

Image
ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில்  வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க  முடியாது சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.  1. மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி இல்லாமல் இருக்க வேண்டும்.   2. கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது.   3. மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது.   4. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன்/கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது.   5. ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.   6. மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது.   7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல்  வேண்டும்.   8. பஞ்சாங்கத்தில் குறிப்ப...

வாஸ்து : மனித செயல்பாடுகளை நிர்ணயிக்கும் வட மேற்கு மூலை..

Image
மனிதன் உயிர் வாழ்விற்கு இயற்கையிலிருந்து தரப்படும் அடிப்படை தேவை காற்று. இது பஞ்சபூதங்களில் மூன்றாவது மூலக்கூறாக கருதப்படுகிறது.    வாஸ்துவில் வடமேற்கு மூலையே காற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இதனை "வாயு மூலை" என்றும் கூறுவர். ஒரு இடத்தின் வடமேற்கு மூலையை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி கட்டடம் கட்டுவது அவசியமாகும்.    வடமேற்கு உள்மூலையில் வரக்கூடியவை:   கழிவறை (உட்காரும் முறை: வடக்கு/தெற்கு நோக்கி அமருவது நல்லது)    தொழில் நிறுவனம் என்றால் விற்க வேண்டிய பொருட்களை வைக்கவேண்டும்.    வடமேற்கு வெளிமூலையில் வரக்கூடியவை:    கழிவு நீர் தேக்கும் தொட்டி(Septic tank)   வடமேற்கு மூலையில் (உள் மற்றும் வெளி மூலைகள்) வரக்கூடாதவை:   பணப்பெட்டி வைக்கும் அறை   படிக்கும் அறை   கிணறு / ஆழ்துளை கிணறு / பள்ளம் / மேடு    போர்டிகோ (Portico)   மேல்நிலை தண்ணீர் தொட்டி   உயரமான மரங்கள்   உள்மூலை படிக்கட்டு    வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட ப...